இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 செப்டம்பர், 2006

என் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா? சகாப்தமா?


ரஜினி :சப்தமா? சகாப்தமா?

::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::
(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)



"பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..
லட்சியமாவது புடலங்காயாவது..
சுகமாக,சந்தொஷமாக,நிம்மதியாக வாழனும்..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. "



இது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...!!

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்.

'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு !.

'ரஜினி' என்ற பெயரே எனக்கு "இது எப்படி இருக்கு?" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.

நான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு !).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்!.

அது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று
மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.
அந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த
பின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.
ஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்
கணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை
வெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.


தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்;

புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !.

இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி
சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்
'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.
வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.

ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?

ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ?

என்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு
காந்த்தோ...M.G.R.ரோ..வேறுயாரோ எல்லோருக்கும் பொருந்தும்.

இதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்
ஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த
எந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்
செய்துள்ளது!.

இவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை
அனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.

ரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவரின் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY

புத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே
மேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி
செய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.

ரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்
ஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்
வரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்

புத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க
வேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.

தமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்
ஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி
அணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்
சினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்
கொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்
வைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்
பிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்
பார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்
அரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.

( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்
கூறியதை நினைவுக்கு வருகிறது "ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்" என்றார்.அதனால்
சினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு
ரஜினியே நல்ல உதாரணம்.

ரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது!. பழைய ரஜினி படங்கள்
(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு
போட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்
இருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று?

ரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்
நிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...

சில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்!!.


ரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...
இது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...


இந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....
என் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...

ஹை பிட்சில் பாடல் ஒலித்தது...

"விடுகதையா உன் வாழ்வே...!


விடை சொல்லுவார் யாரோ...!! "


எழுத்து-கோட்டொவியம்

ப்ரவீன்




பயணங்களின் முடிவில்...

( நிலைகொள்ளா உலகில் நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாகின்றன.பால்ய வயதிலிருந்து பதின் வயதுகளின் சிறகுகளைக் ஏதோ ஒரு அவசரத்தில் களைந்து விட்டு வந்திருக்கிறோம்.நாம் படித்த கல்லூரியோ பள்ளியோ நம் முறிந்த சிறகுகளைச் சேகரம் செய்து வைத்துள்ளது.கல்லூரிக்கால நண்பர்களும் மனிதர்களும் அப்படியே காலத்தின் கைபடாமல் மனதில் நிலைகொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிலவெளியில் பிரவேசித்த நினைவின் மணற்பரப்பிலிருந்து இருந்து சில கிளிஞ்சல்கள் இதோ ...)



சஞ்சி* நிறைய துணிகளுடனும் மனது நிறைய அனுபவங்களுடனும் பேருந்திலிருந்து இறங்குகிறேன்.அருகில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ஏதோ மிகவும் நெருக்கமான நண்பர் போல விடை சொல்கிறேன்.ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் காலியான கீசை**களும் ,பிதுஙும் அனுபவங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன.ஓரிரு சஞ்சிகள் அதிகமாயிருக்ககூடும்.ஒவ்வொரு பயணமும் பெண்மையை முழுமையாக சுகித்தவனைப் போல சோர்வையும் சுகத்தயும் அளிக்கிறது. [ *சஞ்சி-( பயணப் ) பை **கீசை-பாக்கெட் ]

நான் ஒரு தூரதேசி.காற்றின் பாடலுக்கு காது கொடுத்துக் கொண்டே,இலைகள் படபடக்கும் இரகசியங்களை சேகரித்துக் கொண்டே இந்த பிரதேசத்திற்க்கு வந்தவர்கள் தானே நாம்.நான் ஒரு கூழாங்கற்களைப் போல நினைவுகளைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.கூழாங்கற்களை கன்னங்களில் வைத்து பார்த்திருக்கிறீர்களா?.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ?.நான் வார்த்தைகளை விழுங்கிவிட்ட கூழாங்கல்.

இந்த நிலப்பரப்பில் ஒரு ஆயிரம்பேர் இருப்பது தோராயமான கணக்கு தான்.பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் சுவடுகளை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.மின் கம்பத்தில் தோய்த்த சுண்ணாம்பு போல அவை நிறம் மாறியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா?.நாம் எவரெவரோ காலடிச்சுவடிகளின் மேல் நடக்கிறோம்.யார் யாரோ அமர்ந்த இருக்கைகளில் உட்கார்ந்து தோள்களை பகிர்கிறோம்.நம் முகங்கள் யார்யாரையோ எவர்க்கோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.வசந்த காலத்தில் வீசும் காற்றில் இலைகள் ஆடும்போது எவனோ முன்னோன் ஒருவனைப் பற்றிய இரகசியத்தை கசிவதை கவனித்திருக்கிறேன்.உதடுகளில் தேக்கி வைக்கப்பட்டு செலவழிக்கப் படாத முத்தங்கள் கூட இங்கு நிராசைகளாக அலையக்கூடும்.யாரோ இரண்டுபேர் காரணமின்றி நட்பை அறுத்துக்கொண்ட துரதிஷ்டமான தடங்களில் மறுபடியும் பேசப்படாத வார்த்தைகள் மௌனமாக சஞ்ஜரித்துக் கொண்டே இருக்கிறது.நெடிய பொழுதுகளில் அவ்விடங்களை கடக்கையில் விசும்பல் சப்தம் மேலெழுகிறது.தொண்டையில் ஏதோ அடைத்து வலியை உண்டக்குகிறது.கண்களின் ஓரத்தில் சோகம் படிந்து விடுகிறது.

ஏதேதோ காரணங்களுக்காக எவெரெவரோ வெட்கி பூத்த மலர்களில் இன்னும் அதன் சிலிர்ப்பு மீளவே இல்லை.
பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்துடன் எவனோ மரத்தடியில் கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.அந்த பரல்களின் சப்தம் ,ஒரு ஈரத்துணியைப் போல உலர்ந்த வண்ணம் இருக்கிறது.

கல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு கிளம்பும் பயணிக்கும் போதும் பேருந்து நிறுத்தம் வரை நண்பன் வருகிறான்.நாம் தனியே பயணிக்கிறோம்.தனியே விடப்பட்டவனாக திரும்புகிறான் நண்பன்.ஒவ்வொரு பயணத்திலும் யவரோ ஒருவர் விடப்பட்டுவிடுகிறார்கள்.மற்றவர் அவர்களை நினைத்தபடி பயணிக்கிறார்கள்....

வார்த்தைகள் தீர்ந்து விடப்போவது போல அவசர..அவசரமாக பேசிமுடிக்கிறான்.பேருந்து வந்துவிடுகிறது...ஓடிச்சென்று ஏறியவனிடம்.."எப்ப வருவ டா? " என்கிறான் உரத்தகுரலில்.அந்த கேள்வியே சீக்கிரம் வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது.மனம் கணத்தவனாக திரும்பிக்கொண்டிருந்த அவனை கவனித்தேன்.அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்.

பால்யத்தின் இறுதி நாட்களைக் கழித்த இடங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.அங்கு தொலைத்து விட்ட அறியாமையைத் தேடி கலைகிறேன்.காற்று அதை சேகரம் செய்து வைத்துள்ளது.தொடமுயன்ற போது விரல்களின் நடுவே கிழிந்து சென்றது காற்று.

காரணமற்ற சினேகம் கொண்ட மனிதர்களை அங்கு பார்க்க முடிகிறது.பால்யகிலேசத்தில் வந்து புகையிலைப் பொருட்க்கள் கேட்க்கும் பையன்களை விரட்டி விடும் கடைக்காரர்களையும்,ஒருமுறை 4 சிகரட் கேட்ட ஒருவனிடம் "இன்று இதுமட்டும் போதுஞ் சாமி " என்று இரண்டை மட்டும் கொடுத்தனுப்பும் டீக்கடை வியாபரிகளிடமும் சினேகம் கொண்டவனாகவே இருந்தேன்.வியாபாரத்தையும் மீறிய அவர்களின் முதிர்ச்சியான அன்பு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.




சிலுவையை சுமப்பவன் போல நகர முடியாமல் அவ்விடங்களைக் கடக்கிறேன்.சிலுவை சுமப்பவன் இன்னும் சில காலத்தில் அந்த சிலுவை தன்னை சுமக்க போவதை அறிந்தே இருக்கிறான்.தார்சாலை சூட்டில் உருகுவதைப் போல ரகசியமாய் துக்கம் ஏதோ மூலையில் கசிவதை உணர முடிகிறது.அப்போது தான் தெரிந்தது ஆண்டு மாற்றங்களில் இழந்தவைகள் பட்டியலில் கண்ணீரும் சேர்ந்துவிட்டது.

நண்பன் பையின் ஒரு மூலையைப் பிடித்தபடி வருகிறான்.கூடாத சாத்யங்களில் மனம் கூடுகிறது.மனம் ஒரு எடைக்கல்லைப் போல் கனமாக இருக்கிறது.அப்போது தான் வந்தேரிய ஒரு மாணவன் யாரையோ விசாரித்தபடி உள்ளே செல்கிறான்.ஓரு கர்பஸ்திரியைப் போல காலம் பார்த்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.இரண்டு பேருந்துகள் கடந்து போயின.."அடுத்த வண்டியில் போகலாம்", என்றான் நண்பன்.நிராகரிக்கப் பட்ட வன்மத்தில் சுட்டது சூரியன்.தூரத்தில் வரும் அடுத்த பேருந்தில் செல்ல ஒப்பியது மனம்.ஏறிக்கொண்டேன்...கையசைத்தேன்...நகரும் பேருந்தில் துண்டாகித் தெரிந்தது நண்பனின் பிம்பம். தேக்கி வைத்த கண்ணீர் தொண்டயில் வலியை உண்டாக்கியது...."எப்ப...வருவ..." என்பது போல எதையோ கேட்க வந்து மறந்தவன் போல நின்றான்.

வெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது !