இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பதேர் பாஞ்சாலி - The 'Ray' of Hope

*********
"I was a school boy then. It was an excursion. I saw there was a young english man, with no shirt, givin commands around. He had something around his neck that amused me, which years later I found out that it was a 'view finder'. Once everything is set, he said "Ready" and everyone was ready. He then said "roar" and there was roar of wind!. It was considerably a sunny day, Then he said "Rain" and you won't believe it rained!!!. I started shivering. When 'h-e' said "Rain", it rained...I thought he should be 'GOD'. Then I came to know that it was a cinema shooting of 'The Bridge on the River Kwai'.

Thats the day I decided, 'One day I will say "Rain" and it will rain'.... It Rained one day!"

Director Balu Mahendra (in an interview)
**********
"Sathyajit Ray Paints his movie"

Akira Kurosawa
**********

"உத்கல ஜலதித ரங்கா" "வைஷ்ணவ ஜனதோ" போல "பதேர் பாஞ்சாலி" என்ற பெங்காலிச் சொல்லும் அர்த்தம் தெரியாமலே நாம் பாராட்டும் ஏதோ தேசியப் பண் என்று தான் சிறு ப்ராயத்தில் நம்பி வந்தேன்.

அதன் புகழைக் குறிப்பிவதற்காக இதைச் சொல்கிறேன். மற்றபடி தேசிய உணர்வு சகோதரர்கள் அப்படி சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாம்.

ஏறத்தாழ எல்லா வளர்ந்த குடிமகனும் இந்த படத்தைப் பற்றி கேட்காமலோ பார்க்காமலோ இருந்திருக்க முடியாது. (அப்படி கேள்விப்பட்டிருக்காவிட்டால் அதற்கான முயற்சியாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்). சுதந்திர இந்தியாவிலிருந்து வெளிவந்து அகில உலக அங்கீகாரம் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. உலக சினிமாவியலாளர்களால் கண்விரிய இந்தியாவைப் பார்க்க வைத்த படம் என்று சொல்லலாம். இத்திரைப்படம் சர்வதேச விருதுகளைக் குவித்த போதிலும் 'பல நூற்றாண்டுகால அடிமை வாழ்கையில் முற்றிலுமாக உறுஞ்சிவிடப்பட்ட இந்த வெறும்பயல்கள் என்ன சினிமா எடுத்திருக்கப் போகிறார்கள்' என்று பார்த்தவர்களும் உண்டு. "ஒரு Hollywood படத்தின் ரஃப் கட்டிற்குக் கூட தேராது" என்று கூட சொன்னார்கள். தொடர்ந்து வந்த ரே போன்றோரின் படங்கள் இந்திய சினிமாவுக்கான நிலையான நன்மதிப்பை உலக அரங்கில் ஏற்படுத்தியது.

இந்திய கிராமங்களில் சபிக்கப் பட்டிருக்கும் விளிம்பு நிலை வாழ்கையை மேற்கொண்டுள்ள ஒரு சிறிய குடும்பத்தைப் பற்றியது தான் பதேர்பாஞ்சாலி நாவலின் கதை. சோற்றுக்கு வழி இல்லா விட்டாலும் பரம்பரை, சொந்த ஊர், சொந்த கோமணம் என்று அழுகிப் போன கட்டமைப்புகளில் ஒட்டி உறுஞ்சும் நிலைப்பாடு.

இழந்த சௌகர்யங்களையும் நாளைய கவலைகளையும் தினசரி பற்றாக் குறைகளையும் முழுமையான ஏற்புடைமையோடு எடுத்து வாழும் அம்மா...


முன்னோர்களின் பெருமையின் காரணமாக ஒரு சிறிய அடி நிலை ஊழியம் பார்க்கும் அப்பா. மூன்று மாத சம்பள பாக்கியைக்கூட கேட்டால், எங்கே இருக்கும் வேலையும் போய்விடுமோ என்று அஞ்சிப் பிழைக்கும் பஞ்ச வாழ்கை.

கவணிக்க ஆளின்றி மரணத்தை எக்கணமும் எதிர் நோக்கி காத்திருக்கும் வயசான உறவுக்கார மூதாட்டி அத்தை இந்திர். அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சகித்துக்கொண்டு, Shakespeare சொல்வதைப்போல இரண்டாம் குழந்தைப் பருவத்தில் வாழ்கிறாள் அவள்.

இவைகளுக்கு மத்தியிலும் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கள் உலகத்தில் மகிழ்ச்சியாக சுற்றியலையும் துர்கா மற்றும் சிறுவன் அப்பு. வறுமையின் காரணமாக நிராகரிக்கப்பட்ட இனிப்புகள், புது உடைகள், நல்லுணவு எதுவும் அவர்கள் மகிழ்ச்சியை சீர்குலைப்பதில்லை. மாறாக தங்கள் கிராமத்த்திலிருந்து எங்கோ தொலைவில் ரயில் தண்டவாளம் உள்ளதும், அதன் மீது செல்லும் ரயில் தங்கள் ஊரைக் கடக்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதும் தான் அவர்களுடைய அதிக பட்ச விருப்பமாக இருந்தது.

சுதந்திர இந்திய கிராமத்தின் நிதர்சணத்தைக் காட்டியதற்காக கடுமையாக விமர்சிக்கப் பட்டது இத்திரப்படம். இவ்வளவு பிரகாசமாக மின்னும் இந்த திரப்படத்தின் பின்புலத்தில் பலரது வேர்வைகளும், கண்ணீரும் வேடிக்கைகளும் நிறைந்துள்ளது.

1949ம் ஆண்டு River என்ற திரைப்படத்தை இந்தியாவில் எடுத்துக்கொண்டிருந்த ழான் ரினோரிக்கு சில கிராமப்பிற லொகேஷன்களைக் காண உதவி வந்தார் ரே. அப்போது பதேர்பாஞ்சாலியைப் படமாக்கும் தனது எண்ணத்தை தெரிவித்தார். ழான் அதற்கு பெரிதும் உற்சாகப்படுத்தினார். இருப்பினும் திரைப்படம் பற்றிய எவ்வித அனுபவுமற்ற ரேவுக்கிற்கு அதை சாத்தியமாக்கும் வழி பிடிபடவில்லை என்று தான் சொல வேண்டும்.

1950ம் ஆண்டு பணி நிமித்தமாக 6 மாதம் லண்டன் சென்றார் ரே. சர்வதேசத் திரைப்படங்களை இந்தியாவிலே காண வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், அந்த காலகட்டத்தில் சுமார் 99 திரைப்படங்களை லண்டனில் பார்த்துள்ளார். அதில் இத்தாலிய நியோ ரியலிச பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்து விட்டு திரை அரங்கத்தைவிட்டு வெளிவரும் போது தான் "நாம் உறுதியாக இயக்குனராக வேண்டும்" என்று நிர்ணயித்துக் கொண்டதாக கூறுகிறார் ரே. சராசரி மனித வாழ்வின் ஊடாக சினிமாவைச் செலுத்த முடியும்; அமச்சுர் கலைஞர்களை வைத்துக் கொண்டும் சிறந்த படங்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அத்திரைப்படம் அளித்திருக்க வேண்டும்.

ஒரு வழியாக 1952ல் துவங்கிய பதேர் பாஞ்சாலி படப்பிடிப்பில் பங்குபெற்றது பெரும்பாலும் first-timers.உதாரணத்திற்கு ரே அதுவரை ஒரு திரைப்படத்தை இல்லை... எதையுமே இயக்கியது கிடையாது. படத்தின் ஒளிப்பதிவாளர் அதுவரை ஒரு படப்பிடிப்பு கேமராவைத் தொட்டதே கிடையாது. துர்காவின் அம்மாவாக ஒரு அமச்சுர் நாடக நடிகையாக இருந்துவந்த ஒரு நண்பரின் மனைவி நடித்தார். துர்காவும் ஒரு நாடக கலைஞராக இருந்தார், அப்பு கதாபாத்திரத்திற்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப் பட்டும் திருப்த்திகரமான முகம் அமைவில்லை. கடைசியில் ரேவுடைய மணைவி அருகாமையில் வசிக்கும் ஒரு சிறுவனையே அப்பு கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார். பெரும் சவாலாக இருந்தது மூதாட்டி இந்திர் கதாபத்திரத்திறகான தேர்வு தான். இறுதியில் வேசிபுறத்தில் தங்கிவந்த ஓய்வு பெற்ற நாடக கலைஞர் சுனிபாலதேவியைத் தேர்ந்தெடுத்தார்கள். மற்ற கலைஞர்கள் படப்பிடிப்பி நடந்த கிராமத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.



படப்பிடிப்பு துடங்கியதிலிருந்தே படத்தயாரிப்புக்கான குறைபாடுகள் இருந்துவந்தே தான் இருந்தது. படத்தைத் தயாரிக்க யாரும் முன் வராத நிலையில், சில ஃபூட்டேஜ்களை எடுக்க தொடர்ந்து ரே டிசைனராக பணிபுரிந்து வந்தார். தன்னுடைய ஆயுள் காப்பிட்டை அடகு வைத்து பணம் கடன் வாங்கினார். அItalicதுவும் பத்தாததால் தன்னிடமிருந்த பெரும் LP ரெகார்டுகளை விற்றார். ரே வின் மனைவியை சமாதானம் செய்து அவரது நகைகள் அனைத்தையும் பணையம் வத்தார். இது எல்லாம் இருந்தும் ஏற்பட்ட பணப்பற்றாக் குறையினால் படப்பிடிப்பு சுமார் ஒரு வருடம் தடைபட்டுப் போனது.

அதன் பிறகு படம் அங்கும் இங்குமாக துண்டு துண்டாகவே அவரால் எடுக்க முடிந்தது. படப்பிடிப்பு தாமதம் அவரை மிகவும் வருத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். அப்போது தான் மூன்று அதிசயங்கள் நடந்ததாக பின்னாளில் வேடிக்கையாக‌ குறிப்பிடிகிறார் ரே. ஒன்று அப்பு வின் குரல் உடைந்துவிடவில்லை; இரண்டு துர்கா பெரிதாக வளர்ந்துவிடவில்லை; மூன்று இந்திர் மண்டையைப் போடவில்லை!


அப்போது இந்தியாவில் தங்கியிருந்த Museum of Modern Arts சின் அதிகாரி ரேவின் அரைகுறை சுருள்களைப் பார்த்துவிட்டு இதை MoM Exhibition ல் திரையிடலாம் என்று நம்பிக்கை ஊட்டினார். அந்த உற்சாகத்தில் மீண்டும் மும்மரமாக பணியில் ஈடுபட்டார். நல்லவேளையாக MoM மூலமாக கொஞ்சம் பணமும் கிடைத்தது. மேலும் அப்போதைய முதலமைச்சரை மிகவும் வற்புறுத்தி பதேர்பாஞ்சாலியின் அரைகுறை சுருள்களைக் காண்பித்தபோது அவர் அதில் மிகவும் ஈர்க்கப்பட்டு ரே படத்தை முடிப்பதற்கு உதவுவதாக கூறினார். அவருக்கு சாலை மேம்பாடு நிதியிலிருந்து லோன் வழங்கப்பட்டது. மாநில அரசு அது கிராமப்புற மேம்பாடுக்காக எடுக்கப் பட்ட டாக்குமென்ட்ரி என்றே நம்பிவந்தது. ஒரு வழியாக 3 வருட படப்பிடிப்புக்குப் பிறகு படம் வெளியாக தயாரானது.

ஆரம்பநிலை வரவேற்பின்மை ரேவிற்கு பெரும் வருத்ததை அளித்தது. தானே விளம்பரத்திற்காக போஸ்டர்கள் தயாரித்தார். நியான் விளக்கில் அப்புவும் துர்காவும் ஓடுவது போல வடிவமைத்து கல்கத்தாவின் முக்கிய சாலைகளில் வைத்தார். ஒருவழியாக செவிவழி விளம்பரத்தினால் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வந்தது பதேர்பாஞ்சாலி. சர்வதேச அரங்குகளிலும் வெளியிடப்பட்ட பதேர்பாஞ்சாலி பெரும் வரவேற்பைப் பெற்றது. உதாரணமாக ந்யூயார்க்கில் Fifth Avenue Playhouse சில் 8 மாதங்கள் தொடர்ந்து ஓடியது. இந்தியாவில் 'வெற்றிகரமாக' ஓடிய தோ 7 வாரங்கள்!.

Times of India நாளிதழ‌ல் "இதை மற்ற இந்திய சினிமாவோடு ஒப்பிடிவது அபத்தமானது" என்று குறிப்பிட்டது. வங்காள முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு திரையிடலில் இப்படத்தைப் பார்த்த பிரதமராக இருந்த ண்டிட் நேருவை வெகுவாக கவர்ந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட போது அவ்வருடத்தின் Best Human Document விருதைப் பெற்றது. இன்று Slumdog millionare படத்தை விமர்சிப்பது போல "Exporting India's Poverty"என்று சிலர் விமர்சித்த போதும், அதைத் தொடர்ந்து பதேர்பாஞ்சாலி குவித்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் ஏராளம் ஏராளம்.

எத்தனையோ போரட்டங்களுக்குப் பிறகும் இப்படத்தை எடுக்க உதவியது பலருடைய பண உதவி மட்டும் அல்ல... சத்யஜித்ரே கொண்ட ஒரு கனவும்.... அதன் மீது அவர் வைத்த நம்பிக்கையும் தான். பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!.



இந்த காலகட்டத்தில் வருத்தமளிப்பது என்னவென்றால்...'பதேர்பாஞ்சாலி' போன்ற ஒரு நல்ல படத்தை எடுப்பதற்கு அப்போது இருந்த எல்லா நெறுக்கடிகளும் இப்போதும் ஒரு நல்ல படம் எடுப்பதற்கு உண்டு என்பது தான். அப்போது பொருளாதாரம் தடையாக இருந்தது. இப்போது படப் பொருளின் ஆதாரம் தடையாக உள்ளது. வருமான விருத்திக்காக மட்டும் என்று ஆகிவிட்டு, எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிடப்படும் திரைப்படங்களும், தொடர்ந்து ரே வுக்கு அடுத்து விழுந்த பெரிய இடைவெளியும் இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. இன்றைய இந்திய சினிமா பற்றிய உலகப் பார்வை எப்படி இருக்கிறது "ஓ...உங்கள் படமா... நிறைய பாடல்களும், நடனமும், மிகுந்த வண்ணமுமாக இருக்குமே...! " என்று தான் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சொல்லிக் கேட்கிறேன்.

இந்தியாவை மையமாக வைத்து வருடத்திற்கு ஒருபடமாவது Hollywood டில் தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப் பட்ட Slumdog millionare படம் 4 Golden Globe விருதுகள் பெற்று, 10 Oscar விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டிருகிறது. இவ்வளவு நாள் அந்த கதை 'இங்கு' தானே இருந்தது?

உலகத்துக்கான இந்திய சினிமாவுக்கு நல்ல துவக்கத்தை அளித்த ரே வைத்தொடர்ந்து மிகச்சிலரே அந்தப் பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மீராநாயர், தீபா மேத்தா, இதோ வந்துவிட்டார் எங்கள் அண்ணன் அமீர் என்று கைவிட்டு எணிவிடலாம். மீண்டும் ஒரு ஆரோக்கியமான தரமான இந்திய சினிமா சமூகம் உருவாகும் சூழல் தற்போது இருந்துவருகிறது. அதை கட்டிப்போடுவதும் கைதூக்கிவிடுவதும் ரசிகர்களான பொதுமக்களிடமும், திரைப்படக் கலையைச் சார்ந்தவர்களின் பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது. ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக்கையும் போல நாமும் நம்பிக்கை கொண்டிருப்போம்.

Definitely there is a 'Ray' of Hope!!

செவ்வாய், 13 ஜனவரி, 2009

என் கருப்பிக்கு ஒரு காதல் கடிதம்

என் ப்ரியத்துக்குரிய‌ கருப்பிக்கு...

இப்படிப்பட்ட நீண்ட கடிதத்துக்கு வருந்துகிறேன். சுருக்கமாக எழுத நேரம் கிடைக்கவில்லை!

"மன்னிச்சுடு" ன்னு ஒரு வார்த்தைல சொல்றது அநாகரிகமாதான் இருக்கு... என்ன செய்யட்டும்...?

அதுக்குள்ள இப்படி நடந்திருக்க வேண்டாம். என்ன ஒரு ஒன்றரை வருஷம் கூட இருக்காது இல்ல...Since we started getting along together...?

நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 'ராட்டை' மூலமா தான் உன்ன எனக்கு தெரியும். உன்ன முன்னாடியே பாத்தும் இருந்தேன். அப்போ இருந்த நெருக்கடில யோசிக்கல. உன்ன என்னுடனே வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டேன். You are not my type. ஆரம்பத்துல உம்மேல பெரிய ஈடுபாடு இருக்குலன்றது உண்மை தான். அது உனக்கும் தெரியும்.

ஆனா இந்த ஒன்றரை வருஷத்தில் எந்த நிமிஷத்துல எனக்கு அப்படி தோனுச்சுன்னு தெரியல. Suddenly I‘ve fallen in love with you. சினிமாத்தனமா தான் இருந்தது, But it was true, you were becoming a part of me. காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடுறதிலிருந்து...ராத்திரி தாலாட்டா உன்னொட குரலை கேட்டு தூங்குற வரைக்கும் நாம ஒன்னாவே தான் இருந்த மாதிரி இருக்கு. அதுவும் மின்சார ரயில்ல காலைலயும் மாலைலயும் அந்த 1 மணிநேரம் கையைப் பிடித்தபடியே பயணிப்பது...என்ன ஆனாலும் கையை மட்டும் நீ விடாம பிடித்தபடி வருவ. எனக்கு வலித்தாலும், வேர்த்தாலும் கூட விலக்கிக்கொள்ள நினைத்ததே இல்லை. எங்க விட்ட நீ?. நான் மெல்ல உன் நகங்களின் கூர்மையான விளிம்புகளை வருடியபடி வருவேன்....நீ எனக்கு மட்டும் கேட்குற மாதிரி சன்னமான குரலில் நீ பாடிட்டு வருவது... ப்ச்ப்...அதை விட சுகம் வேறு இல்லை.!

நண்பர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஞாபகப்படுத்துவ, சீசன் டிக்கட் ரென்யூ பண்ணச் சொல்லிஅனுப்புவ... நீ இல்லாம எங்க என்னால இயங்க முடியாதோன்னு கூட தோணியிருக்கு. ஒருவேள அதுதான் இப்போ நடந்துகிட்டு இருப்பதோட துவக்கமோ?

ஒரு நாள் நீ இல்லைனா கூட அன்றைக்கு முழுக்க ஸ்தம்பிச்சு போயிடுது. அப்பவெல்லாம் உன்ன பத்தின நினைப்பு தான். இந்த நேரத்துல நீ என்ன பண்ணீட்டு இருப்ப ன்னு தான் யோசிச்சுட்டு இருப்பேன். ஆனா அது எப்படி உனக்கு தெரியும். நீ பக்கதுலயே இருக்கும் போது நீ இருப்பது போல கூட நான் காட்டிகிட்டதே கிடையாதே!.

நீ என்னுடன் இருப்பதை விட துரத்தில் எங்காவது உனக்குத் தெரியாமல் உன்னைப் பார்க்கும் போது, என் கையைப் பிடித்தபடி மளிகை ஜாமான்கள் வாங்கும் போது, யாருமற்ற வார இறுதி மதியவேளையில் உன் அமைதியான உறக்கத்தின் போது... உன்னைப் பார்த்த படியே ரசித்துக் கொண்டிருப்பேன். ச்சே..! என்ன அழகு நீ..!?

உனக்கு உடம்பு சரியில்லாத நேரங்களைப் போல் எனக்கு வேதனை அளிப்பது வேறெதுவும் இல்லை. அவசியமற்று உன்னுடைய நிரந்திர பிரிவை எண்ணி பயப்படுவேன். மீண்டும் அதே மிடுக்கோடு நீ எழுந்து வரும் ஒவ்வொரு முறையும் புதுசா பிறந்தவனாகவே நினைக்கிறேன்.

கொஞ்சம் குண்டு தான் நீ...ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத் துடங்கியது. உன்னுடைய டார்க் காம்ப்ளெக்ஷன் தான் உன்னோட மெருகு... உன்னை ஒவ்வொரு அங்குலமும் காதலித்தேன் என்பது தான் உண்மை.

எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது... அன்னிக்கு அது நடந்திருக்க வேண்டாம். நீ அங்க இருந்திருக்கக் கூடாது. பெரிய தப்பு... நான் வேர கொஞ்சம் ஓவரா தான் இருந்தேன். அன்னிக்கு கார்க்கி வீட்டுக்கு வந்திருந்தான். எப்போதும் நீ தூங்கிய பிறகு தான் சரக்கடிப்பது தான் வழக்கம். பாலுவிடம் கத்துகிட்ட நல்ல பழக்கம் அது. ஆனா அன்னிக்கு பகல்லையே சரக்கு... என்ன செய்யுறது? வெளிய சித்திரை மாத சென்னை வெயில். அவன் வேற பெங்களூர்லயே பொறந்து வளந்தவன் மாதிரி வெளிய போகமுடியாது, செத்துருவேன்னு உயிரெடுக்கத் தொடங்கியிருந்தான். ஏற்கனவே கடுப்புல தான் இருந்தேன். நீ யாரோ கூப்பிடுகிறார்கள் என்று உள்ளே வந்தாய். அந்த சமயம் ஏதோ வாக்குவாதம் எக்குத்தப்பாக போய்... நான் ஏதோ பல தொந்தரவுகளை மனசில் வச்சுட்டு...ஒரு பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசிவிட்டேன்! அது அவன் தலைமுடியை உரசிக்கொண்டு பின்னால் சென்று ஏ.சி யில் பட்டு கீழே விழுந்தது. இதைப்பார்த்து நடுங்கியபடி அவன் பின்னால் நீ இருந்ததை நான் கவனிக்கவில்லை. அடுத்து அந்த மெட்டல் சிகரட் கேஸ்... அதன் விளிம்பு அவன் நெத்தியில் பட்டு லேசான காயம் ஏற்பட்ட போதும் எனக்கு திருப்தி ஏற்படாததால் எழுந்து அவனைத் தள்ள எத்தனித்தேன். அவன் பாதுகப்புக்காக நகர்ந்தது...நான் உன்னைத் தள்ளிவிட நேர்ந்தது. பின் சுவற்றில் நன்றாக மோதிக்கொண்டாய். தலை பக்கவாட்டோடு சுவற்றோடு நன்றாக மோதி பலத்த சப்தம் கேட்டது. அப்படியே சுருண்டு விழுந்து விட்டாய். ஒரு சப்தம் இல்லை...அழுகை இல்லை...!

அப்பவும் உடனே நான் உன்னைத் தூக்கவில்லை... அவன் முன்னாடி என்னோட weakness சைக் காடிக்க விரும்பல. அவனுக்கு எல்லாம் தெளிந்துவிட்டது. "என்னன்னு பாரு" என்றான்.

"எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றேன்.

பிறகு சிறிது நேரம் கழித்து உன்னை எடுத்து இருத்தினேன். தலையில் லேசான சிறாய்ப்பு. கை ஊன்றியதில் சதை சற்று உரிந்துவிட்டிருந்தது. காலில் உடைந்த பாட்டில் பட்டு பிளந்துவிட்டிருந்தது. பெருத்த அவமாணமாக எனக்கு இருந்த போதிலும் சற்றும் நான் வெளிக்காடிக்க வில்லை. உயிருக்கு ஏதாவது ஆபத்தாகிவிடுமோ என்று ஒரு வினாடி பயந்தது உண்மை தான்.

சாயங்காலம் நானே காலில் கட்டு போட்டுவிட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரிடம் போகவில்லை. தேவையில்லாமல் ‘எப்படி ஆச்சு’ என்ற தர்மசங்கடமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். மருந்து இட்டுவுடும் அவ்வளவு நேரமும் நீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் பயந்து கொண்டிருந்த நிரந்திர பிரிவு இது தானோ என்று பயந்தேன்.

நெற்றியில் ஏற்பட்ட சிறாய்ப்பு காயம் கூட உன்னுடைய அழகைக் கூட்டுவதாகத் தான் இருந்தது. ஆனால் முன் போல உன்னோடு இப்போது என்னால் பழக முடியவில்லை. நான் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று எனக்காக காத்துக்கொண்டிருந்தது. ஒரு வாரம் கழித்து தான் எனக்கு அது தெரிய வந்தது. நடந்த சம்பவத்தால் நீ ஒரு காது கேட்கும் திறணை இழந்திருந்தாய். குற்றவுணர்ச்சி என்னைத் தின்று கொண்டிருந்தது. பேசாமல் உன்னை உன் உறவினர்கள் வீட்டுக்கு போகச்சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு ..ச்சீ... அவளை ஊனமாக்கிவிட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டான் என்று நினைக்க மாட்டார்கள்?.

சரி...உன்னுடைய சம்மதத்துடன் டைவர்ஸ் வாங்கிக்கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். நமக்கு இதெல்லாம் ஒத்து வராது... நீ எவனாவது நல்லவன் கூட போய் நல்லபடியா இருக்கட்டும். உன்னை பூ போல் பார்த்துக்கொள்ளட்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் நீ அதற்கெல்லாம் அவசியமற்றது போல, எதுவுமே நடக்காதது போல செயல்பட்டுக்கொண்டிருந்தாய். இது எனுடைய ஈகோவை பாதித்தது. உன் ஈகோவின் வெளிப்பாடு தான் இந்த நிபந்தனையற்ற அன்பு என்று நான் நினைத்தேன்.

அதன் பிறகு நீ செய்யும் ஒவ்வொரு சின்ன காரியமும் எனக்கு அளப்பரிய சாதணையைப் போல வரவேற்க ஆரம்பித்தேன். இப்படியே சில மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலை எனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எப்போது உன்னுடைய சுயத்திற்கு வந்து என்னுடைய நிஜத்தை சந்திக்க நேரிடுமோ என்று அச்சத்திலே இருக்கவேண்டியதாகிவிட்டது. அந்த ஒரு நாள் சம்பவத்திற்கு எனக்கு இப்படி பல மாத தண்டணையா...? அடிப்பாவி மகளே…! உன் மீது கோபமாக வந்தது..
சில நாட்களில் உன்னுடைய செயல்கள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த துடங்கியிருந்தது. அது உனக்கும் தெரியும். உன்னையே எல்லாவற்றிற்குமாய் நம்பியிருந்த என்னை ஒரு அகதியாக நிராகரிக்கத் துடங்கி விட்டாய்.

முக்கியமான கலந்துரையாடலுக்கு காலை 9 மணிக்கு போகவேண்டுமென்று தெரிந்தும் உன்னால் அதை தவரவிட நேர்ந்தது. முக்கியமான நேரங்களில் உன்னுடைய அசட்டையால் பல பேர் முன்னிலையில் அவமானப்படும்படியாக ஆனது. இப்போதெல்லாம் ரயிலில் பாடுவதை நீ நிறுத்திவிட்டாய். ரயில் சத்ததை மட்டும் கேட்டபடி ஜன்னலையே வெறித்தபடி வரும் வெறுமையான காலைகளும். இரவுகளில் வீடு திரும்புகையில் அருகருகில் உறங்கியபடி வருவது அர்த்தமற்றதாக இருந்தது. அக்கரையுள்ள நண்பர்கள் சிலர் "இப்படி அவஸ்த பட்றக்கு பேசாம பிரிஞ்சுடுங்களே" ன்னு கூட சொனார்கள்.

உன்னுடைய நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. உன் வர்கதுக்கே உண்டான இயல்பாயிற்றே அது!. சுனாமி வருவதைக் கூட கணித்து விடலாம். ஆனால் நீங்கள் எப்போது சிரிக்கிறீர்கள், எப்போது சீறுவீர்கள், எப்போது அழைப்பீர்கள், எப்போது நிராகரிப்பீர்கள், எப்போது பாடுவீர்கள், எப்போது அழுவீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம். அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி. உங்களைப் புரிந்துகொள்ளுவதற்கான நேரத்தையும் திறமையையும் சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் என்ன...எப்பவோ எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்திருக்கலாம், நிலவில் குடியேறியிருக்கலாம், Customized குழந்தை பெற்றுக்கொள்ள Computer Program எழுதியிருக்கலாம், கஷ்மீர்,தமிழீழம்,காசா, பாலஸ்தீன்,லெபனான் போன்ற பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.

சரி சரி... மன்னித்துவிடு.. இப்போது அந்த பேச்சுக்கெல்லாம் போக வேண்டாம். நான் சொல்ல வந்த விஷயம்..."இந்த சில வார இடைவேளையில் உன்னுடைய absence, வாய்க்கப்பட்ட தனிமை, புத்தாண்டுகாலம், பொருளாதார சரிவு போன்ற காரணத்தால் கிடைக்கப்பெற்ற சில நல்ல வாய்ப்புகள்...
நல்லா யோசித்து பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்... உன்னிடம் சொல்ல பதட்டமாக தான் இருக்கு... இருந்தாலும் உனக்கு சொல்லாமல் எப்படி. அவ‌ உன்னவிட கொஞ்ச‌ம் உய‌ரம் (உனக்கு தெரியாதா...எனக்கு கொஞம் உய‌ரமா இருந்தா பிடிக்கும்னு). உன்னைவிட கொஞ்சம் ஸ்லிம். ஆனால் உன்னைப்போல அழகு இல்ல டி!.

உன்னை அதுக்காக வேறு யாரவது வீட்டில் இருக்கச் சொல்லவோ, இல்ல வாழாவெட்டியா உன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பவோ எனக்கு மனசு வர்ல. நீ எப்பவும் என் கூட இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் குடுக்கும். இப்போ உனக்குத் தேவை நல்ல ஓய்வு. சிறந்த பாதுகாப்பு. இது இரண்டையும் நான் கடைசி வரைக்கும் கொடுப்பேன். நீ தான் புதுசா வர்றவளுக்கு என்னப் பத்தி சொல்லனும். என்னுடைய ருட்டீன் எல்லாம் தெரிந்திருக்க ஞாயமில்லை. அப்படி பாக்காதே...வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். ஆமா உண்மை தான்...






நான் புது மொபைல் வாங்கப் போறென்... Photo கீழ இருக்கு நல்லா இருக்கான்னு பாத்து சொல்லு..



என்றும் அன்புடன்.
நான்.

கருப்பியின் தற்போதைய புகைப்படம்: