இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2009

தாழிடப்பட்ட அறைகள்...

1. தாழிடப்பட்ட அறைகள்




என்னுடையவை தாழிடப்பட்ட அறைகள்

ஜன்னல்வழி உமிழும் வெயிலுக்கும்,
ஊறித்ததும்பும் நிலவுக்கும் மாறுபாடு இன்றி
மௌன சாட்சியாய் நிற்கின்றன என் அறைகள்!

எவளொ ஒருத்தி ஒட்டிச்சென்ற
கண்ணாடியின் மேல் ஸ்டிக்கர் பொட்டு,
அடையாளம் கண்டுகொள்ள முடியாத
யாருடையதோ ஒரு நீள முடி,
சற்றும் சம்மந்தமற்ற கசக்கிய நிலையில்
சிரிய, பூப்போட்ட கைக்குட்டை

பல அந்தரங்கங்களை விழுங்கிக்கொண்டு
படுத்திருக்கிறது அமைதியாய், அறை!

நாட்களை மறந்து
கொடியின் மீது உலறும் உல்லாடைகள்
சருகாகி உதிர்ந்துவிட்ட ஜாடி மலர்கள்
நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்ட படுக்கைகள்
உபயோகிப்பாரற்று நீரற்று உலர்ந்த கழிப்பறைகள்

கதவிடுக்கு கரைப்பான்களும்
பரண்கொண்டிருக்கும் பல்லிகளும்
சமத்துவமாய் உலவும்
கூச்சமற்று கூடித் திரியும்
வெட்டவெளியில் பட்டப்பகலில்!

அனிச்சையாய் கடிதமிட்டுச்செல்லும் அஞ்சல்காரர்கள்
அலுத்துப் போய் விலகிச்செல்லும் சிகண்டியடிப்பவர்கள்
அழைப்பு மணியை அடித்துச்செல்லும் சிறுவர்கள்
குழந்தைகளை எதிர்பார்த்துக் கூவி நிற்கும் ஐஸ்காரன் வண்டி
யவரும் அறிவதில்லை அவர்கள் இழைக்கும்
மூர்க்கத்தனம் எத்தகையது என்று!

என்னுடையவை தாழிடப்பட்ட அறைகள்

ஒரு நள்ளிரவு நேரதிலோ - இல்லை
ஒரு அதிகாலை விடியலிலோ
சாவி துவாரம் முயந்து
திறக்கப்படும் கதவுகளில்
உள்நுழையும் காலனின் வருகையில்

காணாமல் போகும் என் அறையும் - பின்
இந்தக் கவிதையும்...!


**********

2. நேர்மை

ஒற்றையில் சீட்டாடும் மனிதனின் நேர்மை

ஒரு நீதிபதியினுடையதைக் காட்டில்

நம்பகத்தன்மை உள்ளதாய் இருக்கிறது!


**********

3.



தனிமையில் குடிக்கப்படும் தேநீர்-கள்
எந்த சுவையுமற்று இருக்கின்றன
அது உற்சாகத்தை அளிக்கத் தவறுவது
மட்டுமில்லாமல் - அடித்தொண்டையில் நீடித்திருக்கும்
கசப்பையும் உண்டாக்குகிறது!

தானே சமைத்து தான் மட்டுமே உண்ணும்
உணவுகள் வாசணையற்று இருக்கின்றன
விரல் இடுக்குகளில் மீந்திருக்கும் சாம்பார்கூட
ருசியற்று போய்விடுகின்றன!

(இதைக்காட்டில் பல பட்டினிப்பகல்கள் இன்னும்
சந்தோஷமுற்றதாய் இருந்திருக்கிறது)

திரையரங்கிற்கு தனியே செல்ல நேர்கையில்
சிரிக்க நேரிடும் நகைச்சுவைக் காட்சிகள்
அதற்குப்பின் நினைவில் இருப்பதே இல்லை!

இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்த தொலக்காட்சியை
நள்ளிரவு எழுந்து அணைத்த பின்பு
ஒரு நிமிடம் தாமதமாகவே உறங்கச் செல்கிறோம்!

ஒரு நீண்ட பகலில்
தேசிய நெடுஞ்சாலை மத்தியில்
ஒரு கோர விபத்தில்
அகால மரணமடைய நேரிடும் பொழுதின் தனிமை
இது எதைக்காட்டிலும் ஏகாந்தமாய் இருக்கக் கூடும்..!


****************

4. புகையானவள்...





நான் உன் சிகரெட்
என்னை உதடு சுடும் வரைக் குடி...
உன் நுரையீரலில் என்னை நிரப்பு!

"ஒரு முனையில் எரியும் கனலும்
மறுமுனையில் உருகும் பனியும்"
பூகோள முரண்பாடாய் எப்போதும் நீ
சிகரெட் பிடிக்கையில்...

பெட்டியின் கடைசி சிகரட்டின் பாசத்தோடும் - மீதியிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சியின் கவனத்தோடும்
நான் உன்னை அனுகுகிறேன்.

நீயோ, பூட்ஸ் காலால் நசுக்கப்பட்ட
சிகரெட்டின் உதாசீனத்துடன் என்னைவிட்டு
நகர்ந்து செல்கிறாய்

அனைக்கப்படாத சிகரெட்டைப்போல் புகைந்தபடி நான்
…கடைசிச் சாம்பல் வரை!


************

5. ஒரு கபடமற்ற மனதின் சித்திரங்கள்





முட்ட முட்டக் குடித்தாலும் இப்போதெல்லாம்
சாராயம் எந்த போதையும் தருவதில்லை..

நீலப்படங்கள் இப்போதெல்லாம்
எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவது இல்லை..

எல்லா பெண்களிடமும்
வியர்வை கலந்த பவுடர் வாசமே வீசுகிறது..

பயமளிக்கவேண்டிய மயான இரவின் கும்மிருட்டும்
குற்ற முயற்சியையே தூண்டுகிறது..

வரவர...
கபடமற்ற பச்சிளங்குழந்தையின் ஸ்பரிசமும்
வயதான மூதாட்டியின் ஆழப்பார்வையும்..

அதிக நடுக்கத்தை உண்டுபண்ணுகிறது..!

*********