இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே!

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே! 


சற்று வேடிக்கையான பழமொழி தான். கொஞ்சம் கொடுமையானதும் கூட. 

இதை நமது கலாச்சாரத்தில் பொருத்திப் பார்ப்பது சற்று கடினம் தான். நம் ஊர்களில் கைக்குழந்தைகளை குளிப்பாட்ட பெரியவர்கள் இரண்டு கால்களை நீட்டி, அதில் இருகால்களுக்கு நடுவே உண்டாகும் இடைவெளியை ஒரு பள்ளமாகப் பயன்படுத்தி குழந்தையை அதில் கிடத்தி குளிப்பாட்டுவதை இப்போது கூட நாம் பார்க்கலாம். ஆனால் ஐரோப்பிய தட்பவெட்பத்தில் அல்லது வீடுகளின் அமைப்பினாலும் அதெல்லாம் சாத்தியம் இல்லை. பெரும்பாலும் பெரியவர்களது குளிக்கும் தொட்டி போலவே வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான ஒரு குளியால் தொட்டி இருக்கும். அதில் தண்ணீர் நிறப்பி குளியல் அறையிலோ அல்லது பெரியவர்களின் குளியல் தொட்டிக்குள்ளோ அதை வைத்து தண்ணீர் நிரப்பி, குழந்தையை அதில் குளிப்பாட்டுவர்.  பின் குழந்தையை மாற்றி, துடைத்து,  இறுதியாக அந்த சிறிய தொட்டித் தண்ணீரை கழுவி ஊற்றி, அதை உலர்வதற்காக அப்புறப்படுத்தி வைப்பார்கள். 

பழமொழியானது, "குழந்தையைக் குளுப்பாட்டிய தொட்டியை கழுவிக் கவுக்கும் பெண்ணே, அழுக்கு நீரைக் கழுவி ஊற்று, குழந்தையையும் சேத்தி ஊற்றிவிடாதே!" என்பதாகும். 

எதை உணர்த்துவதற்கு இவ்வளவு கடுமையான பழமொழி? 

Jeter le bébé avec l'eau du bain (ஜெத்தே ல-பேபே அவெக் லோ-த்யு-பேங்)

ஏதோ சிந்தணையில் இருந்த பெண்மணி, குழந்தையைக் குளுப்பாட்டி தண்ணீரை அகற்றுவதற்கு முன் அதில் இருந்த (அவ்வளவு பெரிய) குழந்தையை கவனிக்காது போனது போல.. முக்கியமான விஷயத்தைப் விட்டுவிட்டு அவசியமற்றதைப் பிடித்து தொங்கிக்கிக்கொண்டு இருக்காதே! 

இதைத்தான் சற்று கிண்டலாகவும் கொஞ்சம் கோபமாகவும் வெளிப்படுத்துகிறது இந்த சொல்லாடல்.