இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஆகஸ்ட், 2006

நெடுங்கேள்வி


நிலவின் பின் பக்கத்தை
ஏன் யாரும் ரசிப்பதே இல்லை ?

காதலியின் கோபத்தை
ஏன் யாரும் சகிப்பதில்லை ?

அலாரம் அடிக்கும் முன்னே
அம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் ?

பள்ளிக்கூட கடைசி மணி
ஏன் மிக வேறுமையாய் உள்ளது ?

கல்லறைப் பூக்கள்
ஏன் சிரிப்பை மறந்து விடுகிறன ?

கடற்கரை காதலர்களுக்கு
ஏன் மணல் சுடுவதே இல்லை ?

சண்டையிட்ட நண்பர்கள்
ஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை ?

பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?

கழுதை ஏன் பாடுவதே இல்லை ?

பாரதி ஏன் இறந்து போனான் ?

அடுத்த ஊருக்கு வழியனுப்பினாளும்
ஏன் அழுகிறாள் தாய் ?

ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ?

'ஔவை' -யை ஏன்
ஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை ?

காதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை ?

கண்விழிக்கும் போது மட்டும்
ஏன் இரவு நீளமாய் உள்ளது ?

அலாவுதீனின் விளக்கை
இப்போது யார் வைத்திருக்கிறார்கள் ?

நாம் ஏன் இன்னும்
கேள்விகேட்டுக்கோண்டெ இருக்கிறொம் ?

ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !

-2005

1 கருத்து:

  1. // ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
    இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ? //

    ஒருவேள நீங்க அந்த பொண்னுக்கு ரன் மாதவன் மாதிரி தெரிஞ்சிருக்கலாம்.

    // பொய் சொல்லும் கவிஞனை
    அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?//

    பதில் சொல்லுங்க கவிஞரே

    // ஆமாம்...
    நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !//

    அப்பீட்டு

    பதிலளிநீக்கு