இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஆகஸ்ட், 2006

புரியாவிடை

எல்லா ஹோட்டலிலும்
தொலைந்துபோன தன் படிப்பை
தொடைத்து எறிகிறான் ஒரு சிறுவன்


'என் மகனை எந்த கல்லூரியில் சேர்ப்பது ?'
பழைய மாணவனிடம் பாடம் கேட்கிறார்
வாத்தியார்

வளர்ந்த பிறகு
பிடித்து விடுகிறது
வெறுத்த பள்ளியும்
சபித்த டீச்சர்களும்

பிரிவின் நினைவில்
ரசித்து சிரிக்கிறோம்
காதலியின் கோபத்தை

கவிதை வரி முண்டியடித்துக்கொண்டு
வரும் வேளையில்...

இதோ.!
முடிந்து போகிறது பக்கம் !!

-2005

1 கருத்து:

  1. //வளர்ந்த பிறகு
    பிடித்து விடுகிறது
    வெறுத்த பள்ளியும்
    சபித்த டீச்சர்களும்//

    நானும் இதை உணர்ந்திருக்கிறேன். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் செய்தது.

    பதிலளிநீக்கு