இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 அக்டோபர், 2016

நல்ல துவக்கம் - ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை ...


Many years later, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice.

"பல ஆண்டுகள் ழித்து, துப்பாக்கிப் படையை எதிர்கொண்ட போது, கொலோனல் ஆர்லியானோ புயந்தியா, அவனது தந்தை முதன்முதலில் பனிக்கட்டிகளைப் பார்க்க அவனை அழைத்து சென்ற நெடுந்தூரத்து  பிற்பகலை நினைவுகொள்வான்..." இது துல்லியமான மொழிப்பெயர்ப்பா என்பது தெரியாது. ஆனால் இது மிகவும் பிரசத்தி பெற்ற கெப்ரியல் கார்சியா மார்க்வெஸ் -சின் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை நாவலின் துவக்க வரிகளாகும். உலகில் சிறந்த 100 புத்தகங்களுக்கான பல பட்டியல்கள் உள்ளது. அதில் அநேகமாக எல்லாவற்றிலும் இடம்பெறக் கூடிய புத்தகம் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை. நாவல் மட்டுமல்ல, மேலே கொடுத்துள்ள நாவலின் துவக்க வரிகளும் மிகப் பிரபலம். உலகில் எழுதப்பட்ட நாவல்களிலேயே சிறந்த துவக்க வரிகளைக் கொண்ட நாவல்களின் பட்டியல்களிலும் இது இடம்பெறுகிறது. ஒரு நாவல் அல்லது ஒரு கதைக்கு துவக்க வாசகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பாடமாக இதைக் குறிப்பிடுகிறார்கள்.

நாவலை முழுவதுமாக படித்து முடித்தவர்கள் மீண்டும் இந்த முதல் அத்யாயத்தைப் படிக்கும் போது இந்த முதல்வரியானது எவ்வளவு திறப்பைக் கொடுக்கும் என்பது ஆச்சர்யமாக இருக்கும். நாவலை கடைசி அத்யாயத்தை முடித்துவிட்டு, அதன் மயக்கத்திலிருந்து வெளிவர விருப்பமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கிய வெகு சில புத்தகங்களில் நூற்றாண்டுகாலத் தனிமையும் ஒன்று.

இப்போது அந்த முதல் வரி நமக்கு சொல்லும் சங்கதிகளை பார்ப்போம்.

 - இப்போது பேசப்படும் காட்சி தாண்டி பல வருடங்கள் கதை நீளப்போகிறது  - கதையின் ஒரு மைய பாத்திரம் ஆர்லியானோ புயந்தியா  - அவன் ஒரு கொலோனல்  - ஒரு கட்டத்தில் அவன் எதிரியின் துப்பாக்கி கொலையாளிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது...தோல்வியின் காரணமாக இருக்கலாம்  - அவரது தந்தையைப்பற்றி தெரியவருகிறது, அவர் புதியவைகளைத் தேடிச்செல்லக்கூடிய ஆளாக இருந்திருக்கலாம்  - ஒரு நாஸ்டால்ஜியா வின் கூறு முதல்வரியிலேயே இருக்கிறது

இப்படி ஒரு வரியே நாவலுக்குள் எட்டிப்பார்க்க ஒரு சாளரமாக அமைந்திருக்கிறது. இந்தவரி பற்றி ஒரு கதை சொல்வார்கள்.

அப்போது மார்க்வெஸ் ஒரு நாவல் எழுதுவதற்கான கருவோடு அலைந்துகொண்டிருந்தார். ஆனால் அதை எழுதுவதற்கான மொழியும், நடையும் அமையப்பெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு நாள் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்லும்போது சட்டென்று இந்த வரி அவர் மனதில் தோன்றியது "Many years later, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice." கொன்சமும் தாமதிக்காமல் வண்டியை அபடியே வீட்டிற்கு திருப்பினார். சில சிகரெட் பாக்கட்டுகளை மட்டும் வாங்கிக்கொண்டு, ஒரு அறையில் தன்னைப் பூட்டிக்கொண்டு தொடர்ந்து 18 மாதங்கள் தினமும் எழுதி அந்த நாவலை முடித்திருக்கிறார்.

அதற்கு நடுவில் அவரது காரை விற்று குடும்ப செலவுக்கு அதை பயன்படுத்தினார். அத்யாவிசிய பொருட்களெல்லாம் கடனில் வாங்கப்பட்டது. வீட்டு உரிமையாலருக்கு கூட 9 மாத பாக்கி. தினமும் ஒரு சில நண்பர்கள் மட்டும் அவரை வீட்டில் சந்திப்பார்கள். அவர்களிடம் நாவலின் முன்னேற்றம் பற்றி விவாதிப்பார். இப்படியாக நாவலை முடித்தபின் அதற்கு ஒரு பதிப்பாசிரியரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு பதிப்பாளர், அதை வாங்கி படித்துப்பார்க்க சம்மதித்தார். அத‌னால் அவர் வைத்திருந்த கையெழுத்துப் பிரதியை அவருக்கு அனுப்பச்சொன்னார். பிரச்சனை என்னவென்றால் மார்க்வெஸ் எழுதிமுடித்திருந்த கையெழுத்துப் பிரதி அதிக எடை இருந்தது. அவ்வளவு எடையை தபாலில் அனுப்ப அவரிடம் பணம் இருக்கவில்லை. ஒரு யோசனை தோன்றியது. கையெழுத்துப் பிரதியில் ஒரு பாதியை மட்டும் அனுப்பும் அளவு காசு இருன்ந்ததால், முதலில் ஒரு பகுதியை அனுப்பலாம். பதிப்பாளருக்கு பிடித்திருந்தால் அவரிடமே பணம் வாங்கி மறுபாதியை அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

பகுதி பிரதியையும் அனுப்பிவிட்டார். அதன்பிறகு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தான் தெரிந்தது. அவர் அனுப்ப நினைத்த முதல்பாதிக்கு பதிலாக, இரண்டாம் பாதியை தான் தபாலில் அனுப்பிவிட்டு வந்திருப்பதாக. நூற்றாண்டுகாலத் தனிமை நாவலில் வரும் சம்பவங்கள் போலவே அவரது வாழ்கை சம்பவங்களும் அமைந்திருப்பதொன்றும் தற்செயல் இல்லை அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக